அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது.எ-டு :’மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளக்கும்;தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்.’இதன் கண், யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும்ஓசையும் பொருளும் மாறுபடாது நெடிலடி நான்காய் நிகழ்தலின் இது கலிமண்டிலத்துறையாம்.(யா. க. 88 உரை.)