இன எழுத்துப்பாட்டு மிறைக்கவி வகை. வல்லினப் பாடல்,மெல்லினப்பாடல், இடையினப்பாடல், குற்றெழுத்துப் பாடல்,நெட்டெழுத்துப்பாடல் என்பன பலவும் ஓரெழுத் தினம் என்ற சித்திரகவியில்அடங்கும். அவ்வத் தலைப்பிற் காண்க. (தண்டி. 97 உரை; யா.வி.பக்.540)