ஓரசையான் ஆகிய சீரும் பொதுச்சீர் (- சிறப்பு இல்லாத சீர்) ஆகும்.அது நேர், நிரை என இருவகைத்து.வெண்பா இறுதி ஓரசைச்சீரான் முடிதலுமுண்டு. அப் பொழுது இறுதிச்சீர்போல வரும் நேரசையும் நிரையசையும் முறையே நாள் எனவும் மலர் எனவும்வாய்பாடு பெறும்.எ-டு : ‘வாலெயி றூறிய நீர் ’ (குறள். 1121) நாள் ,நெஞ்சத் தவல மிலர் (குறள். 1072) மலர் .(யா. கா. 14 உரை)