தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்றஐந்தனையும்; அகவல், ஒழுகல், வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனால் உறழவரும் வண்ணங்கள் இருபதனையும், மீண்டும் குறில் நெடில் வலி மெலி இடைஎன்பவற்றால் உறழ வண்ணங்கள் நூறாக விரியும். யா. வி. பக். 10 (யா. கா.43 உரை)