இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறைதல் (தொ.செய். 119 இள.).தன்னை அசையென்று பகுத்துச் சொல்வதற்கேற்ற சீர்கள் வாராமையால்அசைத்தன்மை ஒழிந்து நிற்பது; இது சொற்சீரடிக்கண் வரும்.எ-டு : ‘ஒருசார்’ என்பதனொடு வேறு சீர்கள் வந்து அடிநிரப்பினால்-தான் அஃது அசையென்று பிரிக்கப்படும். அவ்வாறின்மையின் ஒழியசைஎன்றாயிற்று. 123 பேரா.வேறோர் அசையொடு கூடாது ஒழிந்து நிற்பதோர் இயலசை யாதல்.எ-டு : ‘ஒரூஉக், கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற’ கலி.88‘ஒரூஉ’ என்று நிரையசை தானே ஒழியசையாயிற்று. (123 நச்.)