ஒருவிகற்ப இன்னிசைவெண்பா

இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெறாது நான்கடியும் ஓர் எதுகைபெற்றுவரும் இன்னிசை வெண்பா.எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;அகடுற யார்மாட்டும் நில்லாது, செல்வம்சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2)இது நான்கடியும் ஓர் எதுகை பெறுதலின் ஒரு விகற்பம்.` (யா. க.61)