ஒருசாரார் கூறும் தொடை விகற்பங்கள்

கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என்பன ஒருசாராரால்கொள்ளப்படுவன. இவர்கட்கும் இயைபுத் தொடை ஈற்றிலிருந்தேகணக்கிடப்படும்.அடிதோறும் இறுதிச்சீர் (மோனை முதலியவற்றால்) ஒன்றி வருவது கடை;ஓரடியில், இறுதியிரண்டு சீர்கள் அவற்றால் ஒன்றிவருவது கடையிணை;இரண்டாம் நான்காம் சீர்கள் ஒன்றிவருவது பின்; முதற்சீர் நீங்கலாக ஏனையமூன்றும் ஒன்றிவருவது கடைக்கூழை; 2, 3 ஆம் சீர்கள் ஒன்றிவருவதுஇடைப்புணர். இத்தொடை விகற்பம் அளவடிக்கண்ணேயே கொள்ளப்படும். (யா.க.39)