ஒன்பது இன்சாரியை பெற்று வருமொழிகளொடு புணரும். இன்சாரியை ‘இற்று’
எனத் திரிந்து புணர்தலுமுண்டு.
ஒன்பதின் கலம், ஒன்பதிற்றுக் கலம், ஒன்பதின் சாடி, ஒன்பதிற்றுச்
சாடி முதலாக அளவுப்பெயரும், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதிற்றுக் கழஞ்சு,
ஒன்பதின் தொடி, ஒன்பதிற்றுத் தொடி – முதலாக நிறைப்பெயரும்,
ஒன்பதினாயிரம், ஒன் பதிற்றுக்கோடி – முதலாக எண்ணுப்பெயரும் என இவற்
றொடு நிலைமொழி ‘ஒன்பது’ புணர்ந்தவாறு. (தொ. எ. 459, 470 நச்.)
ஒன்பதினாழி என்புழி, வருமொழி நகரம் வருவழி, இன்சாரியையின் னகரம்
கெட, வருமொழி நகரம் னகரமாகத் திரிந்து புணரும். (459 நச்.)
ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு = தொள் ளாயிரம்; ஒன்பது
+ ஆயிரம் = ஒன்பதினாயிரம், ஒன்பது + கழஞ்சு, கலம் = ஒன்பதின்கழஞ்சு,
ஒன்பதின் கலம்; ஒன்பது + ஒன்று, இரண்டு, குருணி = ஒன்பதிற்றொன்று,
ஒன்பதிற் றிரண்டு, ஒன்பதிற்றுக் குருணி – என வரும்.
ஒன்பது+ பத்து : வருமொழி பத்து ‘நூறு’ஆம்;ஒகரத்தொடு தகரமெய்
பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும்; னகரம் ணகரமாகத் திரியும்.
ஒன்பது + பத்து
> ஒன்பது + நூறு
> தொன்பது + நூறு
> தொண் + நூறு =
தொண்ணூறு.
ஒன்பது + நூறு : வருமொழி நூறு ‘ஆயிரம்’ ஆம். ஒகரத்தொடு தகர
மெய்பொருந்தும்; நிலைமொழியில் ‘பது’ கெடும் : னகரம் ளகரமாகத்
திரியும். ஒன்பது + நூறு
> ஒன்பது + ஆயிரம்
> தொன்பது + ஆயிரம்
> தொன் + ஆயிரம்
> தொள் + ஆயிரம் =
தொள்ளாயிரம்.
ஒன்பது, எண் நிறை அளவுப்பெயர்களும் பிறபெயரும் வரு மொழியாக
நிகழுமிடத்து, இன் இற்று – என்ற சாரியையுள் ஏற்பதொன்று இடையே வரப்
புணரும். எடுத்துக்காட்டு மேலே குறிக்கப்பட்டுள்ளமை காண்க. (நன். 194,
197)