ஒத்தாழிசை – ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள். (ஒத்து தாழ்இசை என்பது ஒத்தாழிசை ஆயிற்று.) தாழிசை என்பது தானுடைய துள்ளல்ஓசைத்து. தாழ்தல் துள்ளல் என்னும் பொருளது. தரவு ஓசை சிறிதுவேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம் முதலியவற்றுள்இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடைய அன்றியும் வரலாம். ஆயின், தாழிசைக்குப்பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்று அடுக்கி வருதலானும்,ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்தலானும் தாழிசை என்ற பெயர் தலைமையும்பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக் கலிப்பாவுக்குத் தரவு மிகத்துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டு மூன்றடுக்கி வருதலின்ஒத்தாழிசை எனப்பட் டது. சீர்வகைக் கலியுள் தரவு மிகத் துள்ளிவரத்தாழிசை ஓசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர்வருதலும், கொச்சகத்தின் தாழிசை‘நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப்புனைமாண் மரீஇய அம்பு தெரிதீயே’ (கலி. 7)எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும்.தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும், சிறப்புடைமை யானும்ஒத்தாழிசைக்கலி முதலிற் கூறப்பட்டது. கலித் தொகை 150 கலியுள்ளும்ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது என்ப. இதற்கும் கொச்சகத்திற்கும் இடையேகலிவெண் பாட்டுக் கூறியது, அதுவும் இவை போல உறுப்புக்களையுடைத்தாகியும் வரும் என்றற்கு. தரவும் போக்கும் சிறுபான்மையின்றியும் வருதலின், கொச்சகம் அதன்பின் வைக்கப்பட் டது. அடக்கியல்இன்றியும் அடி நிமிர்ந்தும் ஒழுகிசை யின்றியும் வருதலே பெரும்பான்மையாகலின், உறழ்கலி ஈற்றில் வைக்கப்பட்டது. (68 என்ற எண்ணிக்கை சிலகுறைந்தே காணப்படுகிறது.) (தொ. செய். 130 நச்., பேரா.)