எழுபது வகைமையின் வழு நேரா வண்ணம்625 அடிகள் விரியுமாறு

‘வழு நேரும் எழுபது வகைமையாவன’ காண்க. அங்குக் கூறிய உரியசைச்சீர்,இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சி யுரிச்சீர் ஆகியஐந்துசீர்களையும் நிறுத்தி, இரண்டாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்திஉறழ, 25 ஆகும். அவற்றொடு மூன்றாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ,125 ஆகும். அவற்றொடு நான்காம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ, 625அடிகளாம். (ஆசிரியத்துள் ஒத்தசீர்கள் வரின் தளை வழுவின்றாம்;பிறசீர்கள் வரின் தளை வழுவின்றி அமைதல் வேண்டும். அசைச்சீரும்வெண்சீரும் தளைநிலைக்கு இயற் சீரோடு ஒக்கும் என்று கூறினாரேயன்றி,சீர்நிலைக்கண் அவை வேறாகவே நிற்கும் என்க.)625 நாற்சீரடிகள் ஆமாறு – விளக்கம் :முதற்கண் 25 நாற்சீரடிகளுள் முதற்சீர்களை முதலைந்து சீர்கள்உரியசைச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள் இயற்சீராக வும், அடுத்தஐந்து சீர்கள் ஆசிரியஉரிச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள்வெண்பாஉரிச்சீராகவும், இறுதி ஐந்து சீர்கள் வஞ்சி உரிச்சீராகவும்அமைக்க.இரண்டாம் சீர்களை உரியசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்,வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் – என்ற முறையே அமைக்க.மூன்றாம் நான்காம் சீர்களை உரியசைச்சீர் உரியசைச்சீராக அமைக்க.இம்முறையால் 25 நாற்சீரடிகள் கிட்டின.இனி, இவற்றுள் மூன்றாம் சீர்களாகிய உரியசைச்சீரை மாத்திரம் முறையேஇயற்சீராகவும் (25) ஆசிரியஉரிச்சீராக வும் (25) வெண்பாஉரிச்சீராகவும்(25), வஞ்சிஉரிச்சீராகவும் (25) மாற்றி உறழ்க.இவ்வாற்றால் 25 + (25 x 4) = 125 நாற்சீரடிகள் எய்தின. இவையெல்லாம் உரியசைச்சீரால்முடிந்தவை.இவ் ஈற்று உரிச்சீர்களை முறையே இயற்சீராகவும் (125) ஆசிரியஉரிச்சீராகவும் (125) வெண்பா உரிச்சீராகவும் (125) வஞ்சிஉரிச்சீராகவும் (125) மாற்றி உறழவே, இவ்வுறழ்ச்சியால் 125 +(125 x 4) = 625 நாற்சீரடிகள் எய்தப்பெறும். (தொ. செய். 50 ச.பால.)