எழுபது வகைத் தளைவழு : சீர்கள்தட்கும்வழி வருவன

ஆசிரியநிலம் 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 ஆவன.இப்பதினேழனுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழு வழுவும், கலித்தளை தட்பப்17 வழுவும் ஆக ஆசிரியப்பா விற்குத் தளைவழு 34 ஆகும்.வெண்பாநிலம் 7 எழுத்து முதல் 16 எழுத்துமுடிய 10 ஆவன.இப்பத்தனுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்து வழுவும், கலித்தளை தட்பப்பத்து வழுவும் ஆக வெண்பாவிற்குத் தளைவழு 20 ஆம்.கலிக்கு நிலம் 13 எழுத்து முதல் 20 எழுத்துமுடிய 8 ஆவன.இவ்வெட்டனுள்ளும் வெண்டளை தட்ப எட்டுவழுவும், ஆசிரியத்தளை தட்பஎட்டுவழுவும் ஆகக் கலிப்பாவிற்குத் தளைவழு 16 ஆம்.ஆகவே, தளைவழுக்கள் 34, 20, 16 ஆக 70 ஆகும்.(யா. வி. பக். 455, 456)ஒருசாரார்தம் இக்கருத்தினைப் பேராசிரியர் மறுப்பர்.(தொ. செய். 50 பேரா)இனித் தொல்காப்பியம் செய்யுளியல் 50ஆம் சூத்திரத்துள்பேராசிரியர் உரையையே பின்பற்றி -நச்சினார்க்கினியர் உரைக் கருத்து வருமாறு :அகவற்கு இயற்சீர் 19, உரிச்சீர் 4, அசைச்சீர் 4 – ஆக 27வெள்ளைக்கு இயற்சீர் 19, வெண்சீர் 4, அசைச்சீர் 4 – ஆக 27கலிக்கு இயற்சீர் 16, உரிச்சீர் 4, வெண்சீர் 4 – ஆக 24ஆக, கூடுதல் 78.(கலிக்கு நேர் ஈற்று இயற்சீர் 2, அசையானாகிய நேரீற்றியற்சீர் 1, ஆக3 இயற்சீரும் வாரா.)அகவற்கும் வெள்ளைக்குமாக அசைச்சீர் எட்டும் இயற்சீர்ப்பாற்படுத்துத் தளைகோடலின் அவை எட்டும் இயற்சீருள் அடங்குதலின், அவைஎட்டும் நீக்கப்படத் தக்கன ஆகவே, 78 சீர்களின் அவ்வெட்டனையும் நீக்கச்சீர்கள் 70 ஆகும்.சீர்கள் ஒன்று ஒன்றனொடு தட்குங்கால் அவை ஓசையைக் கடந்தால் எழுபதுவழுக்கள் உண்டாகும். அவ்வழுக்கள் நிகழாவகை ஓசை அமையுமாறு அடிகள்அமைதல் வேண்டும்.