எழுத்து எண்ணி அமைந்த வெண்பா

வெண்பா 7 முதல் 16 எழுத்து வரை 10 நிலம் பெறும்.ஏழ் எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ மட்டுத் தான் உண்டு மதம்சேர்ந்துவிட்டுக் களியானை கொண்டுவா என்றான் – களியானைக்கியாரே எதிர்நிற் பவர்!’எட்டெழுத்தடி வெண்பா -எ-டு : ‘ ஆர்த்தார்த்துக்கண்சேந்து வேர்த்து விரைந்துதன் பொன்னோடை யானையின் மேற்கொண்டான் – என்னாங்கொல்மன்னர் உறையும் மதில்.’ஒன்பது எழுத்தடி வெண்பா -எ-டு : ‘சென்று முகந்து நுதலாட்டி மாறேற்றுவென்று பெயர்ந்தானெங் கோ.’இவை மூன்றும் சிந்தடிபத்தெழுத்தடி வெண்பா -எ-டு : ‘ நின்று திரியும் சுடருளை நில்லாது வென்று திரிதருவேன் யானுளனாச் – சென்றோங்கிமண்ணக மார்பின் மறையலோ மற்றினியென்கண்ணகத்துப் பட்ட படி.’பதினோர் எழுத்தடி வெண்பா -எ-டு : ‘இற்றே ன் உடம்பின் எழில்நலம்என்றென்று பற்றுவிட் டேங்கும் உயிர்போல – மற்றுநறுமென் கதுப்பினாள் தோள்தோயின் நண்ணும்மறுநோக் குடையவாம் கண்.’பன்னிரண்டு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ புறத்தன நீருள பூவுளமாவின் திறத்தன கொற்சேரி யவ்வே – அறத்தின்மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டிமுகனை முறை செய்த கண்.’ (தண்டி. 40- 10 மேற்)பதின்மூன்று எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற அரியிளஞ் செங்காற் குழவி – அருகிருந்தூமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்றன்நாமம்பா ராட்டாதார் நாடு.’ (முத்தொள். 77)பதினான்கு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார்மார்பன் அணிமகர வெல்கொடியான் அன்னான் – தனிநின்றுதன்னை வணங்காமைத் தானணங்க வல்லாளேஎன்னை அணங்குறியி னாள்’இவை ஐந்தும் அளவடிபதினைந்து எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ முகமறிந்தா ர் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார்காமம் அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் – ககமறையாமன்னை நீ வார்குழை வையெயிற்றாய் என்னோமற்றென்னையும் வாழும் எனல்.’பதினாறு எழுத்தடி வெண்பா -எ-டு : ‘ படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ (குறள் 606)வெண்பாவின் ஈற்றடி 5 எழுத்து முதல் 10 எழுத்து முடியப் பெறும்ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா -எ-டு : ‘பிண்டி மலர்மேல் பிறங்கெரியுள் கந்துருள்போல் வண்டு சுழன்று வரும் .’