(வரிவடிவமாயின்) எழுதப்படுதலின் எழுத்து (ஒலிவடிவமா யின்எழுப்பப்படுவது எழுத்து) என்பது. அவ்வெழுத்து ஒன்றும் பலவும் ஓசைபுடைபெயர்ந்து ஒலித்தலான் அசை யுண்டாகிறது. அசைகள் தம்முள் பொருந்திச்சீர்கொள்ள நிற்றலான் சீர் தோன்றுகிறது. சீரிரண்டு நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ் சீரின் முதல் அசையுமாகத் தம்முள் பொருந்தி நிற்பதுதளையாம். அத்தளைகள் ஒன்று இரண்டு மூன்று முதலாகத் தம்முள் அடுத்துநடத்தலான் அடியாம். அடிகள் இரண்டனைப் பொருட் பொருத்தமுறத் தொடுத்தல்தொiட யாம். அவ்வடிகள் ஓசைக்கேற்ப அறுக்கப்பட்டு நடக்க உதவுவதாகிய பாத்தூக்கு எனப்படும். (யா. க. 1 உரை)