எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின் சிறப்புடைத்து எனமுன்னும், அசை எழுத்தினான் ஆம் ஆதலின் அதனை அடுத்தும், சீர் அசையினான்ஆம் ஆதலின் அதன் பின்னும், தளை சீரினான் ஆம் ஆதலின் அதன் பின்னும்,அடி தளையினான் ஆம் ஆதலின் அதன் பின்னும், தொடை அடிக்கண் காணப்படுதலின்அதன் பின்னும், பலதொடைகளும் சேர்ந்து தூக்கு (-பா) ஆகும் ஆதலின்அதன்பின்னும் முறையே வைக்கப்படும். (யா. க. 1 உரை.)