அடிமடக்கும் சொல்மடக்கும் எழுத்தின் கூட்டம் என்பதும், ஓர்எழுத்தானும் ஓர்இனத்தானும் வருவனவும் எழுத்து மடக்கின்பாற்படும்என்பதும், கோமூத்திரி முதலிய மிறைக் கவிகளும் ஆராயுங்கால்பெரும்பான்மையும் எழுத்துமடக் கின் பாற்படும் என்பதும் பற்றிஎழுத்துமடக்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. (இ. வி. 709 உரை)