மந்திர வகையால் தகடுகளில் எழுத்துக்களைப் பொறிக்கும் திறத்தைவெளியிடும் ஒருவகையான வெண்பாநூல். இதனைப் புட்கரனார் என்பவர்இயற்றினர் என்பர்.‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடைநெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதேபுட்கரனார் கண்ட புணர்ப்பு’இது மந்திர நூலுள் புட்கரனார் கண்ட எழுத்துக் குறி வெண்பா. இவ்வாறுவருவதை யாப்பருங்கலம் 93ஆம் சூத்திர மாகிய புறனடையாற் கொள்ளுவர்உரையாசிரியர். இது சவலை வெண்பாவில் அடங்கும். (யா. வி. பக். 371)