செய்யுள்களில் ஒவ்வோர் அசையும் தனக்கெனச் சிறப்புப் பொருள்உடையதாய் இருத்தலே சிறப்பு. ஆதலின் அசை களைப் பிரிக்கும்போது அவைபொருள் தருமாறு பிரித்தலே சிறப்பு.சீர்களின் முதலில் நிற்கும் தனிக்குறிலை மொழியினின்று பிரித்து ஒருநேரசையாகக் கூறுதல் ஆகாது. அஃதாவது‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ – முருகு. 1என்னும் அடியில் முதல்சீராகிய உலகம் என்பதன் ‘உ’ என்பதனைத் தனியேபிரித்து நேரசையாகக் கொள்ளல் ஆகாது. (தொ. பொ. செய். 7 நச்..)ஒரு சீரில் உள்ள சொற்களுள் முதற்சொல்லின் ஈற்றெழுத்தை யும்இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தையும் ஒருங்கு சேர்த்து அசை கொள்ளுதல்தகாது அஃதாவது.‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’ தொ. எ. 279 என்னும்சூத்திரத்தில் ‘முற்றஇன்’ என்னும் சீரினை, முற்-றஇன் என்று பிரித்து‘நேர் நிரை’ என்று கூறுதல் கூடாது. ஏனெனில் முற்ற என்பது ஒருசொல்லாம். ஆகவே, ‘முற்றஇன்’ என்பதனை முற் – ற – இன் என மூவசைச்சீராகவே கோடல் வேண்டும்.(செய். 30 பேரா.)தொல்காப்பியம் சொல்லும் நேர்பு நிரைபு அசைகளைப் பிற்காலத்தவர்கொள்ளாமல் விடுத்தலின்‘விசும்புதைவரு வளியும்’ (புறநா. 2)‘வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (முருகு. 106)என்பவற்றில் ‘விசும்புதைவரு’ என்பதனை விசும் – புதை – வரு =கருவிளங்கனி எனவும், வசிந்துவாங்கு என்பதனை வசிந் – துவாங் – கு =கருவிளங்காய் எனவும் கொள்கின்றனர். ஆனால் தொல்காப்பிய முறைப்படி‘விசும்புதைவரு’ விசும்பு – தை – வரு = நிரைபு நேர் நிரை; வசிந்து -வாங்கு = நிரைபு நேர்பு என்றே பகுத்து அலகிடல் வேண்டும்.நேர்பு நிரைபு அசைகளைக் கொள்ளாத ஆசிரியர்களுக்கும் ஒரு சீரிலுள்ளசொற்களின் எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டல் உடன்பாடன்று. ‘கொன்றுகோடு நீடு’ என்பதனைக் கொன் – றுகோ – டுநீ – டு என நாலசைச் சீராகக்கொள்ளாது கொன்-று-கோ-டு-நீ-டு என ஆறசைச் சீராகவே பண்டை யுரையாசிரியர்கொள்வர். (யா. கா. ஒழி. 1 உரை)‘அங்கண்வானத் தமரரசரும்’ என்ற வஞ்சிப்பாட்டில் ‘அனந்த சதுட்டயம்’ என்ற சீரினை அநந் – தச – துட் – டயம் என்று பிரிக்காமல், ‘அநந்- த – சதுட் – டயம் எனப் புளிமா நறுநிழலாகவே கூறுவர். (யா. கா.9)இவ்வாறே அப்பாடலில் ‘மந்தமாருதம்’ ‘இலங்குசாமரை’ என்பவற்றை மந் -தமா – ருதம், இலங் – குசா – மரை என நிரை யீற்று மூவசைச் சீராகக்கொள்ளாமல், ‘மந் – த – மா – ருதம், இலங் – கு – சா – மரை’ என நாலசைச்சீராகவே கொள்வர்.யாப்பருங்கல விருத்தியிலும் ‘அங்கணீலத்’ என்ற சீரினை (சீரோத்து. 6.உரை) அங் – கணீ – லத் எனப் பகுக்காது, அங் – க – ணீ – லத் எனநாலசைச்சீராகவே காட்டியதும், ‘மாரி யொடு’ (சீரோத்து – 7. உரை) என்பதனை‘மா – ரியொ- டு எனப்பகுக்காது’ ‘மா – ரி – யொடு’ எனத் தேமாங்கனி என்றுகுறித்தலும் பண்டை நேரிய மரபினை நினைவுறுத்தும் செய்திகளாம்.ஒரு சீர்க்குள் உள்ள இரண்டு சொற்களின் எழுத்துக்களை இணைத்துஅசையாக்கும் வழக்கம் மிகுந்த காலத்தே கனிச்சீர்களை யுடைய வெண்பாக்கள்காய்ச்சீராகவே கருதப்பட்டு யாக்கப்பட்டன.“வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும்பரிந்துசில கற்பான் தொடங்கல்” (நீதிநெறி . 9)“உடைந்துளா ருட்குவரு கல்வி” (நீதிநெறி. 8)“கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலாம் ” (நீதிநெறி 15)“ சந்திசெயத் தாள்விளக்க” (நள. கலி. தொ. 32)முதலியன எடுத்துக்காட்டுக்களாம்.பரிந்து , சில – நிரைபு நிரை; பரிந் – துசி – ல – நிரை நிரைநேர்உட்கு, வரு – நேர்பு நிரை; உட் – குவ – ரு – நேர் நிரை நேர்கற், ற, வெலாம் – நேர் நேர் நிரை; கற் – றவெ – லாம் -நேர்நிரைநேர்சந், தி, செய – நேர் நேர் நிரை – சந் – திசெ – ய – நேர் நிரை நேர்என்று கொள்ளப்பட்டன.‘சந்திசெயத் தாள்விளக்கத் தாளின் மறுத் தான்கண்டு,புந்திமிகத் தான்களித்துப் போதல்மனத் தேகொண்டு’ (நள.)‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த ’இவற்றின்கண் ‘தாளின்மறு’ என்பதும் ‘போதல்மனத்’ தென்பதும் கனிச்சீர்வெண்பாவிற் புகலாமைப் பொருட்டு மெய்யெழுத்தை நீக்கிக் கணக்கிட்டுத் தா- ளிம – று எனவும், போ – தம – னத் எனவும் பகுத்துச் சீராக்குதலும்;‘இரவின் வந்த’ என்பது கட்டளைக் கலித்துறையடியின் இறுதிச்சீர்விளங்காய் என வருதல் வேண்டுதலின், நாலசைச்சீர் ஆகாமைப் பொருட்டுனகரமெய்யை நீக்கிக் கணக்கிட்டு இர-விவந் – த எனப்பகுத்துச்சீராக்குதலும் பிற்கால வழுவமைதி முறைகளாயின.12 எழுத்தின் மேற்பட்ட வெண்பா அடி கலியோசை யேற்கும் என்பது பண்டைமரபு. பிற்காலத்தே சீர்வகை அடிகளாத லின் எழுத்துக் கணக்கினைநோக்குவதில்லை.