எழுத்திலக்கணம்

மொழிக்கு முதற்காரணமாயும் நாதத்தினது காரியமாயும் வரும் ஓசை
எழுத்து எனப்படும். எழுத்தோசை காரணம் ஆமாறும், மொழி அதன் காரியம்
ஆமாறும், நாதம் காரணம் ஆமாறும் எழுத்தோசை அதன் காரியம் ஆமாறும் காண்க.
(இ. வி. எழுத். 3 உரை)
எழுத்தின் தோற்றமும் வகுப்பும் விகாரமும் என்ற இம்மூன்ற னுள்,
எழுத்து வகைப்பாடு எல்லாம் அடங்கும். என்னை? தோற்றம் என்புழி
எழுத்துப் பிறக்கும் இடமும் முறையும் எண்ணும் எனவும், வகுப்பு என்புழி
முதல் சார்பு உயிர்மெய் முதலிய கூறுபாடு எனவும், விகாரம் என்புழிப்
பதத்திலும் புணர்ப்பிலும் வரும் திரிபாக்கம் முதலிய வேறுபாடு எனவும்
தோன்றும். (தொ. வி. 2. உரை)