எதுகை விகற்பம் எடுத்துக்காட்டு

இணையெதுகை முதலிய விகற்பம் ஏழற்கும் எடுத்துக்காட்டு -நோக்குக.‘பு ன் கால் உ ன் னத்துப் பகைவன் எங் கோ’ (பதிற்.61) – ஆசிரியம்‘ம ற ந்தும் பி ற ன்கேடு சூழ ற்க சூழின்’ (குறள். 204) – வெண்பா‘அ ட ங்காதார் மி ட ல்சாய அமரர்வந்திரத்தலின்’ (கலி.2) கலிப்பா‘பொ ன் னேர் மேனி ந ன் னிற ம் சிதைத்தோர்’ ஆசிரியம்‘உ ரு வக் கடுந்தேர் மு ரு க்கிமற் றத்தேர் ’ (களவழி. 4) வெண்பா‘பெ ரு வரை உறழ்மார் பின் தி ரு வோங்கு கரியோனை ’ கலிப்பா‘உ ள் ளார் கொல்லோ தோழி மு ள் ளுடை’ (ஐங்.) ஆசிரியம்‘வா ண் மாய் குருதி களிறுழக்கத் -தா ண் மாய்ந்து’ (களவழி.1) வெண்பா‘அ ணி வேங்கை செறிநீழல்கிளியோப்பு ம ணி நிறத்தாள்’ கலிப்பா‘ கு ன் றம் கொ ன் ற கு ன் றாக் கொற்றத்து’ (முருகு. 266) ஆசிரியம்‘ப ற் றுக ப ற் றற்றான் ப ற் றினை அப்பற்றை’ (குறள். 350) வெண்பா‘ம ணி வரை அ ணி மார்பிற் ப ணி மேவும் பெரியோனை’ கலிப்பா‘பொ ன் னேர் மேனி து ன் னினர் ம ன் னோ ’ ஆசிரியம்‘கொ ண் டுபா ராட்டுவார் க ண் டிலர்கொல் – ம ண் டி’ (நாலடி 48) வெண்பா‘அ லை கடல் துயிலுணரா ம லை யெடுத்த நி லை யோனை’ – கலிப்பா‘உ ள் ளின் உ ள் ளம் வேமே உ ள் ளாது’ – (குறுந். 102) ஆசிரியம்‘ ப டி யை ம டி யகத் திட்டான் – அ டி யினான்’ (நான்.கடவுள்.) வெண்பா‘க தி பல வி தி யாற்சென் றழுந்தாமல் து தி த்தேத்தி’ கலிப்பா‘க ன் னிப் பு ன் னை அ ன் னம் து ன் னும்’ ஆசிரியம்‘இ ன் றுகொல் அ ன் றுகொல் எ ன் றுகொல் எ ன் னாது’ (நாலடி. 36) வெண்பா‘தி ரி புரம் எ ரி சூழ வ ரி வாங் கும் பெ ரி யோனை’ கலிப்பாஇவ்வாறு இணை முதலிய விகற்பம் ஏழும் நாற்சீரடியாகிய அளவடிக்கண்ணேயேகொள்ளப்படும்.(தொ.செய். 93 நச்.)இனி இவ்வேழு விகற்பமும் முறையே வந்த எடுத்துக்காட்டு வருமாறு :(யா. க. 36 உரை)‘பொ ன் னி ன ன் ன பொறிசுணங் கேந்தி – இணைப ன் னருங் கோங்கி ன ன் னலங் கவற்றி – பொழிப்புமி ன் னிவ ரவிரொளி தாங்கி ம ன் னிய – ஒரூஉந ன் னிற மென்முலை மி ன் னிடை வருத்தி – கூழைஎ ன் னையு மிடுக்கண் து ன் னுவித் தி ன் னடை – மேற்கதுவாய்அ ன் ன மெ ன் பெடை போலப் ப ன் மலர்க் – கீழ்க்கதுவாய்க ன் னியம் பு ன் னை யி ன் னிழற் று ன் னிய – முற்றுமயிலேர் சாயலவ் வாணுதல்அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே’