எதுகை இயல்பு

சிங்கம், தங்கம், பொங்கம் – எனத் தலையாகு எதுகையாகவருவது சிதையாத்தொடை (இரண்டாவது முதலாகச் சில எழுத்து ஒன்றுவது.)கொற்றி, செற்றம், கற்றை – என இரண்டாம் எழுத்து ஒன்றி மூன்றாம்எழுத்து அவ்வெதுகையின் வருக்கமாகிய உயிர் மெய்யாக வருவது சிதையும் தொடை.பார்த்திபன், காய்த்த – என இரண்டாம் எழுத்து ஒன்றாவிடி னும் 3.4 ஆம் எழுத்துக்கள் ஒன்றுவது ஓசைத்தொடை .பாலுக்கு, கூழுக்கு – என இரண்டாம் எழுத்து மெய்யாகஒன்றாவிடினும் உயிராக ஒன்றிவருவது இனத்தொடை.சீருற்ற, நீருற்ற – என இரண்டாவது முதலாகச் சீர்இறுதி வரைப் பலஎழுத்து ஒன்றிவரும் தலையாகு எதுகைத் தொடை அலங்காரத் தொடை.ஆடும் பரிவேல்……….. பாடும் பணியே – என வண்ண வகையால்ஒன்றும் எதுகை. வ ண்ண எதுகைத் தொடை.‘இவ்வகை எதுகையில் யாதும் இலதெனின், செவ்வியகவிகளும் சீர்அழி வுறுமே’ என்றார்.(அறுவகை. யாப்பு, எதுகை இயல்பு 1 – 7)