எதுகையில் ஐ, ஒள

அகரத்துடன் யகர ஒற்று வந்தும், இகரம் வந்தும் ஐகாரத்தின்பயத்தவாம்; அகரத்துடன் உகரம் வந்தும், வகரம் வந்தும் ஒளகாரத்தின்பயத்தவாம்.வருமாறு :‘அய்ய(ஐய) மிலை இன்பமற னோடவையும் ஆக்கும்பொய்யில்பொரு ளேபொருள் மற்றல்ல பிற பொருளே.’ (சீவக. 497)கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமைவெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன்- அவ்வேலே-(கௌவை – கவ்வை)(பு.வெ. காஞ்சி. 23)அவ் (ஒள) வை, கவ் (கௌ), கய் (கை);அஇ = ஐ; அஉ = ஒள. இவையிரண்டும் வரிவடிவிற் கொள்ளப்படா. (தொ. எ.54, 55 நச்.)