எதிர்நிரல்நிறை

சொல்லையும் பொருளையும் (முடிக்கப்படும் சொல்லையும் முடிக்கும்சொல்லையும்) மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ள வரும் பொருள்கோள்நெறி.எ-டு :`களிறும் கந்தும் போல நளிகடற்கூம்பும் கலனும் தோன்றும்.’இவ்வடிகளில் களிறு போலக் கலன், கந்து போலக் கூம்பு என இவ்விருவகைச்சொற்களும் மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ளப்பட்டவாறு. (யா. வி. பக்.382)