எண்சீர்ச் சந்தவிருத்தம்

குறிலீற்று விளச்சீர், தேமா-2, புளிமாங்காய், தேமா, புளிமாங்-காய்,தேமா, புளிமா எனவரும் எண்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்உளமேபு குந்த அதனால்’ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளிசனிபாம்பி ரண்டு முடனேஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியார வர்க்கு மிகவே. (தே. I 85-1)நாற்சீர்ச் சந்தக் கலிவிருத்தங்கள் இரட்டித்து எண்சீர்ச் சந்தவிருத்தம் ஆதலும் உண்டு. (வி. பா. பக். 73)