குழிப்பு ஒன்றும், ஒருசிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை.இவ்வாறு எட்டுக் கலைகள் அமைந்த விருத்தம் எண்கலை விருத்தமாம்.தந்த தானன தனதன தனதன – தனதானா -அடி – 1 கஞ்ச மாமலர் மனையென வளர்தனிஅஞ்ச வாகன முதுகினில் வரும்விதிகன்றி யேபல உடலினி லலைதர – விதியாதேகங்கு லேயெனும் நிறமுறு பகடதில்வெம்பு தூதுவர் செறிதர அன்றுமிழ்கண்க ளானவை சினமிக நமனிவ – ணெதிராதேஅடி – 2 அஞ்சு வாள்விழி அரிவையர் படையொடுதென்ற லேறியொர் கணமதில் எணிலவர்அம்பி னாலடர் சமர்புரி தரமதன் – அடையாதேபந்த வானுறை அரியயர் பலர்தினம்நின்று தேடிட வழிபடும் இருமுனிஅன்று காணுற அருளிய திருவடி – தருவாயே,அடி – 3 செஞ்சொ லார்தரு கவுணிய மதலையைஎங்கள் தேசிக மணியென அருள்பரைசிங்க வாகினி பகவதி திரிபுரை – மணவாளா!செங்கை வேல்கொடு கரிமுகன் அரிமுகன்மிண்டு சூருயிர் கடல்வரை அடுமுயர்செந்தில் மேவிய சரவண குகன்வரும் – விழியானே!அடி – 4 மஞ்சு மாமதி வரநதி நகுதலைகொன்றை தாதகி அறுகணை அவைபுனைமங்க ளாகரம் இலகிய சடைமிசை – யுடையானே!வண்கொள் மாமறை உயிர்நிகர் பசுநிரைகொம்பு மேவிடும் வரமதை உதவிடவந்து மாதையில் வதிதரும் அழகிய – பெருமாளே!இப்பாடலில் நான்கடிகளுக்கு எட்டுக்கலைகள் வந்துள்ளன. இவ்வண்ணம்மிக்கு வருங்கால் அடிக்கு நான்கு கலையாக வும், எட்டுக் கலையாகவும்பதினாறு கலையாகவும் நீண்டு வருதலும் உண்டு. இவை ‘வண்ணத்தியல்பு’ என்றமுருகதாச சுவாமிகளது நூலில் காணப்படும்.