ஊ என்பது இறைச்சியை உணர்த்தும் பெயர். அஃது ஆ என்ற சொல் போல னகர
ஒற்றினைச் சாரியையாகப் பெற்று ஊன் என்றாகும்.
அல்வழிக்கண் ஊன் என்பது இயல்பாகப் புணரும் (நகரமுதல் நீங்கலாக
வருமொழி கொள்க.)
எ-டு : ஊன் கிடந்தது, ஊன் மெலிது, ஊன் வலிது, ஊனரிது (தொ. எ.
269 நச்.)
வேற்றுமைக்கண் னகரச் சாரியையொடு, வருமொழி நாற்கணம் வரினும்
இயல்பாகப் புணர்தலும், அக்குச்சாரியை பெற்று வன்கணம் வரின் மிக்கும்
ஏனைக்கணம் வரின் இயல்பாயும் புணர்தலும் நிகழும்.
எ-டு : ஊன்குறை, ஊன்மென்மை, ஊன்வலிமை, ஊனருமை; ஊனக்குறை,
ஊனஞாற்சி, ஊன வன்மை, ஊன வருமை – என இருநிலை யுமுண்டு. (தொ.எ. 270 நச்.
உரை)
ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்காய்த் தொல்காப்பிய னார்
காலத்தது; அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (தொ.எ. 269 நச். உரை)