ஊசல் வரி

ஊஞ்சற்பாட்டு. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் ஊசல்வரியாகச்சேரமன்னனைப் புகழ்ந்து மூன்று பாடல்கள் ‘ஆடாமோ ஊசல்’ என முடிவனவாகஉள்ளன.இப்பாடல்கள் மூன்றும் வெண்டளையான் அமைந்தவை. நாற்சீரடி ஐந்துகொண்டு அமையும் இம்மூன்று பாடல்களும் ஈற்றடியிலும் ஈற்றயலடியிலும்‘ஆடாமோ ஊசல்’ என்று முடிகின்றன. வரி எனவே, இவை இசைப்பாடல்களாம்.