ஊஞ்சற்பாட்டு. சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையுள் ஊசல்வரியாகச்சேரமன்னனைப் புகழ்ந்து மூன்று பாடல்கள் ‘ஆடாமோ ஊசல்’ என முடிவனவாகஉள்ளன.இப்பாடல்கள் மூன்றும் வெண்டளையான் அமைந்தவை. நாற்சீரடி ஐந்துகொண்டு அமையும் இம்மூன்று பாடல்களும் ஈற்றடியிலும் ஈற்றயலடியிலும்‘ஆடாமோ ஊசல்’ என்று முடிகின்றன. வரி எனவே, இவை இசைப்பாடல்களாம்.