உலக்கைப் பாட்டு

உலக்கையால் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடும் ஒருவகைஇசைப்பாடல் வள்ளைப்பாட்டு. இப்பாட்டுள் ஒரு தலைமகனது வீரம் முதலியவைஇடம் பெறும்.சிலப்பதிகாரத்துள் வாழ்த்துக்காதைக்கண் ‘தீங்கரும்புநல்லுலக்கையாக’ முதலான பாடல் மூன்றும் வள்ளைப் பாட்டு.கலித்தொகையிலும் (41, 42, 43) வள்ளைப்பாட்டு இடைநிலைப் பாடல்களாகவந்துள்ளது.