ஒரு பாட்டினை இடையிடையே கொண்டு நிற்கும் கருத்தி னான் வருவனவும்,பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவன போல்வனவும், பொருள்முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவனவும், பொய்யெனப்படாதுமெய்யெனப் பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலையும் என்று உரைப்பகுதிவழக்கு இந்நான்காம்.(தொ. செய். 173 நச்.)