உரைப்பகுதி

காண்டிகையும் அகலம் கூறலும் உரைப்பகுதியாவன. (இறை. அ. 1 உரை)கருத்து உரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டுதலாகியமுப்பகுதியும் காண்டிகை. காண்டிகைப் பொருளை விரித்துரைத்தல்,காண்டிகைப் பொருளேயன்றி அப்பொருட்கு இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்றஉரைத்தல், மறுதலைக் கடா மாற்றம் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூலானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள்ஒற்றுமைகொளீஇத்துணி வொடு நிற்ப உரைத்தல் என அகலங்கூறல் மூவகைப்படும்.(பா. வி. பக். 162)