அ) கதை தழுவி வரும் தொடர்நிலைச் செய்யுட்கண் கதை நிகழ்வினைத்தொடர்புபடுத்துவதற்குப் புலவர் இடை யிடையே அமைக்கும் குறிப்பு, ஆ)பாவாக நடைபெறாமல் செய்யுள் தொடர்களாக வருவன, இ) அஃறிணைப் பொருள் களைஉயர்திணைக்குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக்கற்பனையாக உரைக்கப்படுவன, ஈ) கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னும்பின்னும் இடையினும் விதூடகக் கூற்றாக வருவன – என்பன நான்கும் உரைநடைவகைகள்.இவற்றிற்கு முறையே எடுத்துக்காட்டு வருமாறு :அ) சிலப்பதிகாரத்துள் இடையிடையே வரும் உரைகளும் கட்டுரைகளும்(இக்குறிப்பு ஒரு சொல்லானும் ஒரு தொட ரானும் பல தொடரானும் பொருள்விளக்கத்திற்கு ஏற்ப வரும்); ஆ) ஆத்திசூடியின் அறிவுரை போல – அறஞ்செயவிரும்பு, ஆறுவது சினம் – பாட்டினமைப்பை ஒத்து வருவன; ஒருபாவிற்குரியதிணை துறை முதலியன கூறுவதும் இதன்கண் அடங்கும்; இ) விழாக்காலத்துநிகழும் பாரதக் கதை போல்வன; இக்காலத்துச் சிறுகதை தொடர்கதைகளை இவ்வகைஒக்கும்; ஈ) எள்ளல் இளமை பேதைமை மடன் என்னும் அடிப்படையில், கேட்போர்வெண்ணகை கொள்ளுமாறு நிகழ்வன. (தொ. செய். 172 ச. பால.)