உரிச்சீர் வெண்டளை

வெண்பாஉரிச்சீர் நின்று வெண்பாஉரிச்சீரோடு ஒன்றுவது சிறப்புடைத்து;வேற்றுச்சீரோடு ஒன்றுவது சிறப்பின்று. இத்தளை வெண்சீர் வெண்டளைஎனவும்படும்.‘குன்றேறி யானைப்போர்’ (குறள் 758) காய்முன் நேர் – சிறப்புடையஉரிச்சீர் வெண்டளை.‘தார்மாலை மார்ப’ (தண்டி. 16-1) – காய் முன்நேர் – சிறப்பில்லாஉரிச்சீர் வெண்டளை. (யா. க. 182 உரை)