இரண்டாம் எழுத்து ஒன்றாது இரண்டாமெழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றிவருவது உயிர்எதுகையாம். (எதுகை யெனவே, சீர்களின் முதலெழுத்து அளவொத்துநிற்றல் வேண்டும் என்பது.)எ-டு : ‘து ளி யொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள்அ ணி கிளர் தாரோய் அருஞ்சுரம் நீந்தி’(யா. கா. 43 உரை)இவ்வடிகளில் இரண்டாமெழுத்து ஒன்றாது, அம் மெய் களின் மேல் ஏறிய இகரஉயிர் ஒன்றி வந்தது.