பு என்ற முற்றியலுகரத்தை இறுதியாக உடைய சொல் ‘தபு’ என்ற ஒன்றே ஆகும் அதனைப் படுத்துக் கூறின், ‘நீ சh’ என்ற தன்வினைப் பொருள்படும்; எடுத்து ஒலிப்பின், ‘நீ ஒன்றனைச் சாவப்பண்’ என்று பிறவினைப் பொருள்படும். (தொ. எ. 76 நச்.)