உண்டிப் பொருத்தம்

க ச த ப ந ம வ என்னும் மெய் ஏழோடும் அகரமும் இகரமும் உகரமும்எகரமும் என்னும் நான்கு உயிரும் செய்யுள் முதல் மொழிக்கு அமைதல் அமுதஎழுத்தாகிய உண்டிப் பொருத் தம் ஆம். ய ர ல ள என்னும் ஒற்றினை ஊர்ந்தஆகாரமும் ஓகாரமும், அவ்வொற்றுக்களும், ஆய்தமும், மகரக்குறுக்க மும்செய்யுள் முதல்மொழிக்கு ஆகா நச்செழுத்து ஆதலின், அவை நீக்கப்படும்.மங்கலமாக எடுத்த மொழிக்கண் இவ் வெழுத்துக்கள் வரின், அவை குற்றமுடையஅல்ல. இவ் வுண்டிப் பொருத்தம் தசாங்கத்தயலிலும் அமையும்.(இ. வி. பாட். 19, 20, 21)