உகரம் நிறைதல்

தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம், வருமொழி நிலை மொழியொடு
புணர்ந்துவரும் அல்வழி வேற்றுமைப் பொருள்நிலைகளில், இருமொழிக்கண்ணும்
இடைவருதற் கண் மாத்திரை மிக்கு முற்றியலுகரமாக ஒலிக்கும். அங்ஙனம்
ஒலிக்குங்கால், வல்லொற்றுத் தொடர்மொழி ஈற்றுக் குற்றிய லுகரம்
மாத்திரம், வருமொழியாய் வல்லெழுத்து வருவழி, அரைமாத்திரை அளவிற்றாகவே
ஒலிக்கும். அதுவும் நிலை மொழியீற்றில் ககரஉகரம்(கு) நிற்க, வருமொழி
முதலில் ககர வருக்கம் வரும்வழியே தான் அரை மாத்திரை அளவிற் றாதலு
முண்டு. (‘நிலையும்’ என்பது நச். பாடம்)
எ-டு : உண்
டு சென்றான் – ஒரு மாத்திரை;
செக்
குக் கணை – அரை மாத்திரை;
சுக்
குக் கொடு – அரை மாத்திரை.
(தொ.எ. 409, 410 இள. உரை) ( எ. ஆ. பக். 163, 165)