குற்றமின்றி நடைபெறும் யாப்பெனவே, அதன் உறுப்புக்களா கிய எழுத்து,அசை, சீர், தளை, அடி, தொடை, பா என்ப வற்றின்கண் குற்றம் எதுவுமின்றியாப்பு நிகழின், அதன்கண் அம்மை அழகு முதலிய வனப்புக்கள் புலப்படும்என்பது.அரசன், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும்ஏழுறுப்புக்கள் அரசியற்கு வழுவற அமைதல் வேண்டும்; நல்லுடற்கு இரதம்,உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழுதாதுக்களும் வழுவற அமைதல் வேண்டும்; அவ்வாறே யாப்பிற்கு எழுத்து, அசை,சீர், தளை, அடி, தொடை, பா என்னும் ஏழுறுப்பும் வழுவற அமைதல் வேண்டும்என்பது. (யா. க. 1. உரை)