குறுந்தொகை இரண்டாம் பாடலை இயற்றிய கடைச்சங்கப் புலவர். இறையனார்சிவபெருமானையே குறிப்பதாகக் கொண்டு புராண வழக்கொடு தொடர்புறுத்திக்கூறவும்படும். ‘அன்பின் ஐந்திணை’ முதலாகத் தொடங்கும் 60 சூத்திரங்களையும் கொண்ட அகப்பொருள் நூல் இறையனார் அகப்பொருள் எனவும் இறையனார்களவியல் எனவும் பெயர் வழங்கப்படுகிறது.இறைவன் அருளியதால் பிற்காலத்தே தோன்றினும் இதனை முதல்நூலே என்பர்.(தொ. பொ. 649 பேரா. உரை)