இறையனார் அகப்பொருள்

கடைச்சங்க காலத்தை ஒட்டி எழுந்ததோர் அகப்பொருட் சுருக்கநூல்.இதன்கண் 60 நூற்பாக்கள் உள்ளன. அவற்றுள் களவு பற்றியன 33; கற்புப்பற்றியன 27. இந்நூலில் களவு பற்றிய பகுதி மிக்கிருத்தலின் அம்மிகுதிபற்றியே இந்நூலை இறைய னார் களவியல் என்றும் கூறுவர். இதனை இயற்றியவர்சிவபெருமானே என்பது முன்னோர் கருத்து. இறையனார் என்ற புலவரது படைப்புஇஃது என்பது இக்காலத்தார் துணிபு. 60 அழகிய நூற்பாக்களைக் கொண்டஇந்நூலுக்கு விரிவான சிறந்த உரை ஒன்றுளது. கடைச்சங்க காலத்தை யொட்டியஇந்நூலுக்கு வரையப்பட்ட உரைப்பகுதிகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தபாண்டிக் கோவையோடு இணைக்கப்பட்டமைந்த உரையே இப்போது காணப்படு கிறது.தமிழில் இப்போது காணப்படும் உரைகளில் இது பழமையானது. (உரையாசிரியர்மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பது தொன்றுதொட்டுத்துணியப்பட் டமை தொ.பொ. 649 பேரா. உரையாலும் அறியலாகும்.)இந்நூற் கருத்துக்கள் சில தொல்காப்பியத்துடன் மாறு பட்டிருப்பினும்கற்க வேண்டிய சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இஃது இறைவன்அருளியதாதலின் பிற்காலத்தே தோன்றினும் இது முதல்நூலேயாம் என்பதுதொல்லா சிரியர் துணிவு (தொல். பொ. 649 பேரா. உரை)இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் செய்தான் யாரோ எனின்,மால்வரை புரையும் மாடக் கூடல் ஆலவா யில் பால்புரை பசுங்கதிர்க்குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாக வுடைய அழலவிர்சோதி அருமறைக் கடவுள்என்பது’ என்று காணப்படும் தொடரால் இந்நூலை ஆலவாய்ப் பெருமான் அடிகளேஇயற்றியருளினார் என்பது முன்னை யோர் கோட்பாடு. (இறை. அ. 1 உரை) அரசஞ்சண்முகனா ரும் இக்கருத்தினரே. (பா. வி. பக். 90)