இறையனார் அகப்பொருள் உரை

இவ்வுரை சொற்பொருள் நலம் சான்றது. மோனை எதுகை நயம்படச் சிலவிடத்தேநெடிய தொடராக நிகழ்வது; உவமைகள் பல இடையிடையே மிடையப் பெற்றது. இதனைஇயற்றியவர் நக்கீரர். இவர் சங்ககாலப் புலவர் அல்லர் என்பதும்அப்பெயரிய பிற்காலத்தொருவரே என்பதும் இக்காலத்து ஆய்வாளரின் துணிபு.இன்று காணப்படும் உரைகளில் இதுவே பழமை மிக்கது என்பது தெளிவு.