இறுதி நில்லாமை

இறுதலொடு நில்லாமை என்பது பொருள். வஞ்சிப்பாவின் அடியில் சீர்கள்இரண்டே. முதற்சீர் வருஞ்சீரொடு தொட ருங்கால் இறுதற்றொழில் பெறுவதுமுதற்சீர் ஆதலின் நேரீற்றியற்சீர் கட்டளை வஞ்சியடியில் முதற்சீராகவாரா; வரின் தூங்கல் ஓசை நிகழாது.எ-டு : ‘கொற்றக் கொடியுயரிய’ என்ற நேரீற்றியற்சீர் முதற்கண்நின்று தூங்காதாயிற்று.‘மேதக மிகப்பொலிந்தஓங்குநிலை வயக்களிறு’ (மதுரைக் 14, 15)என்ற நிரையீற்றியற்சீர் முதற்கண் தூங்கின.‘புன்காற் புணர்மருதின்தேன்தாட் டீங்கரும்பின்’என்ற நேரீற்றியற்சீர்கள் நலிந்து கூறியவழியே முதற்கண் தூங்கின.(தொ. செய். 26 நச்.)அடியீற்றின்கண் வஞ்சிப்பாவில் நேரீற்று இயற்சீர் நில்லாதுமுதற்கண்ணேயே நிற்கும். (25 இள.)