இருவிகற்ப ஓர் ஆசிடை நேரிசை வெண்பா

முன்னிரண்டடியும், பின்னிரண்டு அடியுமாக நான்கடியும் இரண்டு அடியெதுகை பெற்று, இரண்டாமடியின் மூன்றாம் சீர் குறள்வெண்பாவின்ஈற்றுச்சீர் போல இராது அச்சீர் நான்காம் சீரோடு இணைக்கப்படுதற்கேற்பஓரசை இடையே இணைந்து வருவது இந்நேரிசை வெண்பா வகையாம்.‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கிமுலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்குதார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ,கார்மாலை கண்கூடும் போழ்து?’ (தண்டி. 16 மேற்)இப்பாடல், இரண்டா மடிக்கண் மூன்றாம் சீர், அது குறள் வெண்பாவாயின்,‘முனி’ என்று ஓரசையான் முடிய வேண்டி யதனை ‘முனிவாள்’ என ஓரசை கூட்டிநீட்டப்பட்டது, ஓராசு இடையிட்ட நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது. இதன்நான்கடிகளும் ஈரடியெதுகையே பெற்றமையின் இரு விகற்பம். (யா. க. 60உரை)