இருவிகற்ப ஈராசிடை நேரிசை வெண்பா

முதல் ஈரடி ஓரெதுகையாய்ப் பின்னீரடி மற்றோர் எதுகை யாய், முதற்குறட்பாவின் ஈற்றசைச்சீர் இரண்டாமடியின் நான்காம் சீரொடு பொருந்துதல்பொருட்டு இடையே இரண்டு அசைகள் ஆசாக வருமாறு அமையும் நேரிசைவெண்பாவகை.எ-டு : ‘வண்மை மதம்பொழிந்து மாற்றார் திறம்வாடத்திண்மை பொழிந்து திகழும்போன்ம் – ஒண்மைசால்நற்சிறைவண் டார்க்கும் நளிநீர் வயற்பம்பைக்கற்சிறை என்னும் களிறு.’இதன்கண், முதல் ஈரடி ஓரெதுகையும், பின் ஈரடி மற்றோர் எதுகையும்பெற்று வந்துள. இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘திகழ்’ என்பதனோடு ‘உம்,போன்ம்’ என்ற ஈரசைகள் ஆசாக வந்தமையத் ‘திகழும்போன்ம்’ என்றாயிற்று.(யா. க. 60 உரை)