இருமுற்று இரட்டை

எ-டு : ‘அ டி யியற் கொ டி யன ம டி புனம் வி டி யல்ம ந் தி த ந் த மு ந் து செ ந் தினைஉறுப்பார்ப் பருத்தும் நாடனொடுசிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே’ஓரடி ஒரு முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு முற்றெது கையாய்வரின்,அவற்றின் தொடை இருமுற்றிரட்டை எனப்படும். இப்பாடற்கண் (முதல்இரண்டடிகளில்) இரு முற்றிரட்டை வந்தவாறு. (யா. க. 51 உரை)