இருபொருள் சிலேடை இணை மடக்கு

எ-டு : ‘மூவுலகெண் முத்தரைப்போல் முந்நீர் முகிற்பெயல்போல்காவலர்கள் வீழ்வேங் கடவெற்பே – தேவர்பெருமான் பெருமான்கண் பெண்வளைக்கை யார்மூ -வருமால் வருமாலின் வைப்பு’இப்பாடலில், முதல் ஈரடியும் சிலேடை; பின் ஈரடியும் இணை மடக்கு.மூவுலகும் புகழும் முத்தரைப் போலக் காவலர்கள் (-அரசர்கள்) விழுந்துவணங்கும் வேங்கடமலை, கடலில் படிந்த மேகம் மழைபொழிவது போலக் காஅலர்களினின்று தேன் சொரியும் வேங்கடமலை என்பது சிலேடை. காவலர் -அரசர்; கா அலர் – சோலைமலர்கள்.தேவர்கள் பெருமானாய், பெரிய மான் போன்ற கண்ணி னரும் வளையல் அணிந்தகையினருமான திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் ஆகிய மூவருள்ளத்தும் வேட்கையைப் பெருகச் செய்யும் திருமாலின் இருப்பிடம்.பெருமான் என்பது பெரு மான்; (மூ)வரு(ம்) மால், வருமால் என்பதுமடக்கு.இவ்வாறு இப்பாடல் இருபொருட் சிலேடை இணைமடக்கு ஆதல் காண்க. (மா.755)