நேரிசை வெண்பா வகை. இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதல்தொடைக்கேற்ற தனிச்சீரால் அடி நிரம்பி, செப்ப லோசை வழுவாது, முதல்இரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பமாய்வரினும், நான்கடியும் ஒரே விகற்பமாய் வரினும் இருகுறள் நேரிசை வெண்பாஎனப்படும்.எ-டு : ‘தடமண்டு தாமரையின் தாதா டலவன்இடமண்டிச் செல்வதனைக் கண்டு – பெடைஞெண்டுபூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்(து)ஊழி நடாயினான் ஊர்.’இதன்கண், ‘பெடைஞெண்டு’ என்பது தனிச்சீராய் அடி நிரப்ப வந்தவாறு.(யா. கா. 24)