எ-டு : ‘பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றேமாலைவாய் மாலைவாய் இன்னிசை – மேலுரைமேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ,காவலர் காவலராங் கால்?’‘காவலர், காஅலர் ஆங்கால், மாலைவாய், மாலை வாய் இன்னிசை மேல், உரைமேவலர் மேவு அலர்’ என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.“தலைவர் என்னை மணந்து பாதுகாப்பவர் அல்லாதகாலை, மாலைக்காலத்தில்,வரிசையாக ஆயர் வாயினின்று வெளிப் படும் இனிய குழலிசை பாலையாழைவிடஇருபது மடங்கு துன்பம் தரவும், புகழை விரும்பாத தீயமக்கள் விரும்பிக்கூறும் அலர் என் உயிரை வாட்டாதோ?” என்று தலைவன் சிறைப்புறத்தானாகத்தலைவி தன் துயரைத் தோழிக்கு உரைத்தது இப்பாடல்.மாலைவாய் – மாலைப்பொழுது, வரிசையாக வாயினின்று வரும்;மேவலர் – (உரை) மேவாத தீயமக்கள், சொல்லும் பழிச் சொல்;காவலர் – தலைவர், நம்மைக் காவாதவர் – என முதலடி ஒழிந்த மூவடியிலும்ஆதிமடக்கு வந்தவாறு. (தண்டி. 95 உரை)