எ-டு : நலத்தகை பெறஇரு சரணம் ஓதும்நம்குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனேநலத்தகை மகளொரு பாகம் நண்ணுமேல்குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே.மேம்பட்ட நலம் பெற, திருவடிகள் இரண்டனையும் பரவிப் பணியும் அடியார்குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும்ஏகாம்பரநாதன், பார்வதியை ஒருபாக மாக கொண்டு, குலத்தான் மேம்பட்டபாம்புகளைக் கொண்டு புனையப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன் என்றுபொருள்படும் இப்பாடற்கண்,நலத்தகை பெற, இரு சரணம் ஓதும் நம்குலத்த கை பணிகொள் ஏகாம்பரத்தனே,நலத்தகை மகள் ஒரு பாகம் நண்ணவும் குலம் தகை பணி கொள் ஏக அம்பரத்தனாம்- எனப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.ஏக + அம்பரத்தன் – ஒற்றை மாமரத்தடியில் இருக்கும் பெருமான்.ஏக + அம்பரத்தன் – ஒற்றை ஆடையை உடையவன்.பணி – தொண்டு, பாம்பு. (தண்டி. 96 உரை)