பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே மோனைத்தொடைபடஅமையுமாயின் அம் மோனை இரண்டடி மோனையாம்.எ-டு : ‘ஆகங் கண்டகத் தாலற்ற ஆடவர்ஆகங் கண்டகத் தாலற்ற அன்பினர்பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார்பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்.’ஆகங், ஆகங்பாகங், பாகங் } இரண்டடி மோனை.(யா. க. 37 உரை)