பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே எதுகைத்தொடைஅமைய வருமாயின், அவ் வெதுகை இரண்டடி எதுகையாம்.எ-டு : ‘உலக மூன்றும் ஒருங்குடன் ஒத்துமாண்திலக மாய திறலறி வன்னடிவழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்’ (வளை.)உ ல கம், தி ல கம்வ ழு வில், தொ ழு வல் } இரண்டடி எதுகை(யா. க. 37 உரை)