இரட்டை நாக பந்தம்

அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் //தெருளின்மரு வாருசிர்ச் சீரே – பொருவிலா // வொன்றே யுமையா ளுடனேயுறுதிதரு // குன்றே தெருள வருள்.மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு // பெருகொளியான்றேயபெருஞ் சோதி – திருநிலா // வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த // மயருமளவை யொழி.இவ்விரண்டு பாட்டும் இரண்டு நாகங்களின் தலை நின்று தொடங்கிவால்முனைக ளிறுதியாக இடையிடையே தத்தம் உடலினும், பிறிது பிறிதுடலினும்மாறாச் சந்திகளினின்ற எழுத்தே மற்றை யிடங்களினு முறுப்பாய் நிற்க,ஒவ்வொரு பாம்பிற்கும், மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும்,கீழ்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டு பாம்பிற்கும்நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாட்டிற்கும் பொருந்த நான்கெழுத்துமாகச்சித்திரத்தி லடைபட்டு முடியுமாறு காண்க.